அவிநாசியில் செருப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

அவிநாசியில் செருப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கோவை மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரில் நகைக்கடை பேக்கரி ஆயில் ஸ்டோர் ஹோட்டல் மளிகை கடைகள் பேன்சி ஸ்டோர் கட் அடுத்தடுத்து செருப்பு கடைகள் உள்ளன, இந்நிலையில் நேற்று இரவு அசாருதீன் என்பவரது செருப்பு கடையில் இருந்து யூபிஎஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்து செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றி எரிய ஆரம்பித்தது.

அந்த தீ மள மளவென்று கடை முழுவதும் பரவியதால் பெரும் புகை வரத் தொடங்கியது கடையின் உள் சிக்கி தவித்த ஊழியர் வெப்பம் தாங்க முடியாமல் அலறினார் உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து  அந்த ஊழியரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர் இதனால் அவர் உயிர் தப்பினார் மேலும் தீ செருப்புக்கடையின் மேல் தளத்திலும் பக்கத்து கடைகளிலும் தீ பரவ ஆரம்பித்தது உடனடியாக அவிநாசி தீயணைப்பு நிலையத்திற்கும் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.



தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதற்கிடையில் மின்வாரிய ஊழியர்களும் விரைந்து அந்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்தனர் ஆனாலும் தீப்பிடித்தது  ரப்பர், தோலினால் ஆன பொருட்கள் இதனால் அதிக அளவில் புகை சூழ்ந்தது அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக கட்சி அளித்தது திருப்பூர் குமார் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.


தீயணைப்பு துறை வீரர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகே தீ முற்றிலும் அணைக்கப்பட்டது தீ விபத்து பற்றி தகவல் அறிந்த அவிநாசி தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் இந்த தீ விபத்தால் அவிநாசி ரோட்டில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அவிநாசி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad