ஆய்வின்போது இரண்டு மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 3.5 (மூன்றரை) டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நியமன அலுவலர் கூறுகையில் பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது.
இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும். ரசாயனமூலம் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு புகார் தொடர்பாக 9444042322 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தார்கள்

No comments:
Post a Comment