தாராபுரம் அருகே துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2023

தாராபுரம் அருகே துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

photo_2023-06-02_14-44-08

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களாம்பாளையம் துர்க்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். துர்க்கையம்மன் கோவில் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்டது மங்களாம்பாளையம்., இங்கு ஊர் பொதுமக்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணகுதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதி, கும்பம் புறப்பாடு நடந்து ஆலயம் வலம் வந்தது. கும்பாபிஷேகம் பின்னர் கோவில் ஸ்தூபி, கோபுரம், கோவில் மூலஸ்தான தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மங்களாம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் துர்க்்கையம்மனுக்கு புதிதாக கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹாமண்டபத்துடன் கூடிய நூதன ஆலயம் அமைத்து விநாயகர், துர்க்கை, முனியப்பசாமி மற்றும் துர்க்கைபிடாரி அம்மனுக்கு நூதன விக்கிரபிரதிஸ்டை செய்து மகா கும்பாபிஷேக நிறைவு பெற்றது. 


விழாவில் மணக்கடவு, காளிபாளையம், குமாரபாளையம், மீனாட்சிபுரம், கொளத்துப்பாளையம், கரையூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad