திருப்பூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் .
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் தமிழகத்தில் கொலை கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க தவறிய அரசை கண்டித்தும் திருப்பூர் குமரன் சிலை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம் எல் ஏ தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவசாமி அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், திருப்பூர் வடக்கு எம் எல் ஏ என்.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ என் எஸ் என் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரி ஹரசுதன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் வர்த்தக அணி செயலாளர் எஸ் பி என் பழனிச்சாமி 38 வது வார்டு செயலாளர் முன்னாள் கவுன்சிலருமான ஆண்டிபாளையம் ஆனந்தன் மாணவரணி செயலாளர் சதீஷ் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி தலைவர் கண்ணப்பன் மற்றும்கூட்டுறவு சங்க தலைவர் கே குணசேகரன் தலைமையில் பத்தாவது வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment