உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா நினைவு நாள் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 August 2024

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா நினைவு நாள் ஆலோசனை கூட்டம்




அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பிரிஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜி. கே. விவசாய மணி ( எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஆலோசகர் எஸ். சென்னியப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ)சுப்பிரமணி அவர்கள் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் நினைவு நாளை மிகச் சிறப்பாக அமைதியான முறையில் நடந்த வேண்டும் என்றும் மேலும் பல ஆலோசனைகளை வழங்கினார்.



மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad