உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் நினைவு தினத்தில் ஆயிரம் வாகனங்களில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த ஆலோசனை கூட்டம் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜிகே.விவசாயமணி(எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் இருபத்தி ஒன்னாம் தேதி நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 40 வது நினைவு தினத்தில் சுமார் 1000 வாகனங்களில் பேரணியாக சென்று அமைதியாக முறையில் அஞ்சலி செலுத்த ஆலோசனை நடைபெற்றது தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் தலைமை அலுவலக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment