திருப்பூர் மாநகராட்சி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் முன்பு சாக்கடை கழிவு நீர் வெளியேறி நாற்றமடிக்கிறது. பொதுமக்கள் நடமாட முடியவில்லை இந்த பேருந்து நிலையத்திற்குள் சுகாதார அலுவலகம் உள்ளது இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை சுகாதார கேடுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் ஆனால் சுகாதார அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மாநகராட்சியில் சாக்கடை கழிவு நீர் உறிஞ்சுவதற்கு வாடகை லாரி மாநகராட்சியில் உள்ளது அதை வைத்து உடனுக்குடன் சாக்கடை கழிவு நீரை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் சாக்கடை கழிவு நீர் ஆறு போல் ரோடுகளில் போகிறது இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது பயணிகள் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment