திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலத்தில் பணியாற்றி வந்த சுகாதாரத்துறை அதிகாரி ராஜேந்திரன் எஸ்ஓ அவர்கள் கோவைக்கு பணியிட மாற்றம் செய்ததையொட்டி அவருக்கு கீழ் பணியாற்றிய எஸ்,டபிள்யூ,எம்,எஸ் மேஸ்திரி ஆறுச்சாமி அவர்கள் ராஜேந்திரன் எஸ் ஓ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தங்களுக்கு ஒரு மேல் அதிகாரியாக இல்லாமல் சகோதரர் போல் ஒன்னாவது மண்டல சுகாதாரத் துறையில் சிறப்பாக எங்களை அரவணைத்து பணியாற்றிய ராஜேந்திரன் எஸ் ஓ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்து பிரியாவிடை அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment