திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலை அணைக்கட்டு பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது மற்றும் இந்த கோயிலுக்கு மேல் பகுதியில் சில கிலோமீட்டர் மேலே சென்றால் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதன் அருகில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது இந்த பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் திரளாக வருவார்கள் தற்போதய நிலவரப்படி தொடர் கனமழை காரணமாக இந்த பஞ்சலிங்க அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் பஞ்சலிங்க அறிவித்து செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது
செய்தியாளர்.
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment