திருப்பூர் தெற்கு மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவ காத்திருப்பு அறைகள் மற்றும் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறப்பு விழாவில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியம் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினித் இஆப ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
விழாவில் திருப்பூர் மாவட்ட மருத்துவ இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் திமுகழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment