திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம் காங்கயம் பரஞ்சேர்வழி ஊராட்சியில் தீத்தாம்பாளையம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே கே ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் காங்கேயம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ் முன்னிலை வைத்தார் நிகழ்ச்சியில் திருப்பூர் திமுகழக தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தீத்தாம் பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு இல்லம் தேடி சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார் இதில் மாவட்ட பொது குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் காங்கேயம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment