திருப்பூரில் கணவனை இழந்த பெண்ணிடம் பெற்ற மகளே வீட்டை பறித்து விட்ட பரிதாப நிலை கருணை கொலை செய்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

திருப்பூரில் கணவனை இழந்த பெண்ணிடம் பெற்ற மகளே வீட்டை பறித்து விட்ட பரிதாப நிலை கருணை கொலை செய்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பெஸ்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்  இவரது கணவர் அப்துல்கரீம் சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தனர் இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளன‌ இவர்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்தாஜின் கணவர் இறந்து விடவே மும்தாஜ் அந்த வீட்டில் வசித்து வந்தார்.


மேற்கொண்டு இருந்த ஒரு வீட்டின் வாடகை தனக்கு வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்த நிலையில் தனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா அவரது கணவர் உமர்ஷரீப் இருவரும் மும்தாஜை பார்த்துக் கொள்வதாக கூறி அவரது வீட்டில் குடியேறி உள்ளனர் பின்னர் காலப்போக்கில் அவரது மகளும் மருமகனும் சேர்ந்து தன்னை வெளியேற்றி விட்டதாகவும் தான் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் தான் குடியிருக்க ஒரு வீட்டை கொடுக்க மகளிடமும் மருமகனிடமும் உத்தரவிட்டும் அந்த உத்தரவை சிறிதும் கூட மதிக்காமல் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை உள்ள நிலையில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும் சர்க்கரை வியாதி மட்டும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரையின்றி வாழ முடியாத நிலையில் அவர்களை வெளியேற்றி எனது வாழ்வாரத்தை காத்திடுமாறும் இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad