திருப்பூர் மாநகர 1வது மண்டல திமுக தலைவர், வேலம்பாளையம் திமுக பகுதி செயலாளர், 10வார்டு திமுக மாமன்ற உறுப்பினர், திமுக பொறுப்பாளர்களுடன் இந்தி தினிப்பு எதிர்ப்பு பரப்புரை செய்தார்கள்.
திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு ஆத்துப்பாளையம் அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பத்தாவது வார்டுக்கு சேர்ந்த பகுதிகளில் பொதுமக்கள் இடையே மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிடக் கோரி பரப்புரை மற்றும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 1வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ், 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, 10வார்டு திமுக பொறுப்பாளர்கள், திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் தொழிற்சங்க பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment