உலக மக்கள் உயிர் வாழ தன்னை வருத்தி உணவு தரும் விலைமதிப்பற்ற விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் உரிமைகளை பெற துணையாக இருக்கும் அனைத்திந்திய விவசாயி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைகள் தமிழகமெங்கும் திறந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் சாமுண்டிபுரம் கிளை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார் விழாவிற்கு திருமலைசாமி மற்றும் திருமதி சாந்தி அவர்கள் தலைமை வகித்தனர் விழாவில் கிருஷ்ணகாந்த். சாய் வெங்கட் சதீஷ்குமார் அருண்குமார் செல்வமணி ஜான்சன் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணியினர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment