திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் வேண்டுகோள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் வேண்டுகோள்.


தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து உரையாடும் கூட்டம் மாவட்ட, செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொறுப்பு அமைச்சர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர் தலைமையில் நடத்த வேண்டும் என்ற தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக 4 சட்டமன்ற தொகுதிகளான திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் அவிநாசி ஆகிய தொகுதிகளில் கீழே குறிப்பிட்ட இடங்களில் காணொளி காட்சி மூலம் இன்று மாலை 4 மணிக்கு அந்தந்த தொகுதிகளில் தனித்தனியே நடைபெற உள்ளது.

இதில் மாண்புமிகு திமுக தலைவர் அவர்கள் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார் நான்கு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தங்களுக்குரிய வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர்கள் குறித்த விவரங்களுடன் குறிப்பிட்ட உள்ள மையத்தில் குறித்த நேரத்தில் மையங்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் பல்லடம் ரோடு .திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் செங்குந்தர் திருமண மண்டபம் புதிய பேருந்து நிலையம் பின்புறம். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் லட்சுமி திருமண மண்டபம்( பி) மஹால் பொங்கலூர். அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதியில் ரபா கே ஆர் ஆர் திருமண மண்டபம் பழைய பேருந்து நிலையம் அருகில் அவினாசி. மேற்கண்ட இடங்களில் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு தெற்கு தொகுதி எம்எல்ஏவும் வடக்கு  தொகுதி மாவட்ட திமுகழக செயலாளருமான க.செல்வராஜ் MLA அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad