திருப்பூரில் தொடர்ந்து மாபெரும் இந்தி தினிப்பு போராட்ட பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

திருப்பூரில் தொடர்ந்து மாபெரும் இந்தி தினிப்பு போராட்ட பொதுக்கூட்டம்.

முதல் இந்தி தினிப்பு எதிர்ப்புப் போர் 1937 இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் 1948 மூன்றாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர் 1965 இதில் முதன்மையாக நின்று வெற்றி கண்டது தமிழகமே 2022 இந்தி தினிப்பு எதிர்ப்பு போராட்டம் வலுவடைகிறதா? தமிழக முதல்வரும் திமுகழகத் தலைவரும் ஆகிய மு க ஸ்டாலின்  மற்றொரு இந்தி திணிப்பு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு எச்சரித்த நிலையில் இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் தொடர்ந்து மாபெரும் இந்தி தினிப்பு போராட்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம். 22 ஆவது வார்டு கிளை கழகம் சார்பாக திருப்பூர் சிவன் திரையரங்கம் அருகில் மாபெரும் இந்தி தினிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை வெ.ராதாகிருஷ்ணன் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிறப்புரை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி (EX MP) திருப்பூர் வடக்கு திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க .செல்வராஜ் எம்எல்ஏ தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான்  திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளரும் தொமுச பேரவை மாநில துணைச் செயலாளரும் ஆகிய டி கே டி மு நாகராசன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ்குமார்  உரையாற்றினர்.


இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தொமுச பேரவை நிர்வாகிகள் மண்டலத் தலைவர்கள் இந்நாள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad