திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ திருப்பூர் மாநகர மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பகுதி, வட்ட திமுகழக செயலாளர்கள் களத்தில் இறங்கினார் கள் தமிழகம் எங்கும் மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது தமிழகம் இந்தி திணிப்பிற்கு எப்போதும் ஆதரவு கொடுக்காது என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் தமிழக மக்கள் மீது இந்தியை திணிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து மேயர் என் தினேஷ் குமார் தலைமையில் தேர்தல் பொறுப்புக் குழு தங்கராஜ் மாநகர 1வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு 14வது வட்டக் கழக செயலாளர் மு ரத்தினசாமி மற்றும் அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணி இளைஞர் அணி வர்த்தக அணி சார்ந்த திமுகழக அனைத்து நிர்வாகிகளும் வடக்கு பகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று பொது மக்களை சந்தித்து இந்தி எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டும் நோட்டீஸ்களை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இந்தநிகழ்வில் தமிழே எங்கள் மொழி தமிழே எங்கள் உயிர் இந்தியை திணிக்காதே தமிழை ஒழிக்க முயற்சிக்காதே என்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு பரப்புரை மேற்கொண்டனர்.


No comments:
Post a Comment