மாற்றத்தை காண முயலும் ரேஷன் கடை ஊழியர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 December 2022

மாற்றத்தை காண முயலும் ரேஷன் கடை ஊழியர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளியான சரவணன் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் இவர் இந்த கடையில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஒருங்கிணைத்து whatsapp குரூப் உருவாக்கியுள்ளார், இந்த குரூப் மூலம் ஒவ்வொருவருக்கும் ரேசன் கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரம் குறித்து தகவல் தெரிவிக்கிறார்.

அதன்படி குடும்ப அட்டைதாரர் தங்களுக்கு தேவையான பொருட்கள் உள்ள நாட்களில் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர் மேலும் அவர் கடை வேலை நேரம் வேலை நாள் அரசு விடுமுறை நாள் தற்காலிக விடுமுறை போன்றவற்றை குறித்தும் முன்கூட்டியே அந்த குரூப்பில் பதிவிடுகிறார்.


இதனால் அந்த தகவல் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சென்றடைகிறது இதன் மூலம் வெகு தூரத்திலிருந்து ரேஷன் கடைக்கு வரும் மக்கள் ஏமாற்றம் அடையாமல் வீணாக அலைகழிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது இதனால் இந்த பகுதி பொதுமக்கள் ஊழியர் சரவணன் சேவையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad