திருப்பூர் ஏவிபி டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19 வது ஆண்டு விழா நடைபெற்றது, விழாவில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் எம்.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பேசினார் அப்போது மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
பள்ளி தாளாளர் இ கார்த்திகேயன் பொருளாளர் லதா கார்த்திகேயன் முதல்வர் டயானா ஒருங்கிணைப்பாளர் ஆர் வித்யா ஏவிபி கல்விக் குழும அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விழாவில் இந்த கல்வியாண்டின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆண்டுரையாக முதல்வரால் வாசிக்கப்பட்டது இதை தொடர்ந்து மாணவர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:
Post a Comment