உடுமலை நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களை நியமிக்க நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்!! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

உடுமலை நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களை நியமிக்க நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்!!


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளான வீடு வீடாக சென்று குப்பை சேகரித்தால் மற்றும் வணிக நிறுவனங்களில்  குப்பை  சேகரித்தல் ஆகிய பணிகளை தனியார் ஒப்பந்தம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகள்  கொள்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 


ஆகையால் உடுமலை நகராட்சியில் சராசரியாக  தினசரி சேகரமாகும் 21.36 டன் குப்பைகளை சேகரிக்க டன் ரூபாய் 4,594 என்ற வகையில் குப்பையிலே சேகரிக்க தினசரி 98 ஆயிரம் செலவாகும்  மூணு ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் 12 கோடியே 78 லட்சம்  செலவிடப்படுகிறது  தற்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் குப்பையில நகராட்சியாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குப்பை சேகரிப்பில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது. 

இதை தொடர்ந்து உடுமலை நகராட்சி சிறப்பு நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் மத்தின் தலைமையில் நேற்று நடைபெற்றது .

 

- உடுமலை  தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad