உடுமலை எரிசனம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை இடமாற்ற செய்யக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
உடுமலை மின் பகிர்மான வட்டம் எரிசனம்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வருகிறது, இந்த அலுவலகத்தை சுற்று பகுதியைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட ஊர் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மின்வாரிய அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டாம், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment