திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ள தேசிய நெடுஞ்சாலை பணி புதிதாக வேலை செய்யப்பட்டு வருகின்றது . அந்த இடத்தில் இரும்பு கம்பியை திருடிக் கொண்டிருந்த ஒப்பந்ததாரரை பொதுமக்கள் பிடித்து உடுமலை காவல், நிலையத்தில் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேகம் புதூர் பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தின் 37 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு நிலையில் அடைத்தனர்.

காஜா மொய்தீன்(37) மீது இந்திய தண்டனைச் சட்டம் 379 பிரிவின் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரும்பு கம்பியினை ஏற்றுச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ் .
.jpg)
No comments:
Post a Comment