திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா கொழுமம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு கேரளாவை சேர்ந்த தனது கூட்டாளி கனகராஜ் கொழுமம் பகுதியில் வீடு எடுத்து தங்கி பிரிண்டர் மிஷினில் கள்ள நோட்டுகளை அச்சடித்தனர்.

இந்த நிலையில் மூணாறில் உள்ள சிடிஎம் இல் சோதனை செய்யும் விதமாக கனகராஜ் தனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதை எடுத்து வங்கி, அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கனகராஜ் கைது செய்த போலீசார் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள போலி ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
- உடுமலை தமிழர் குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment