திறன்மிகு திருப்பூர் மாநகராட்சியின் திறமை மிக்க ஆணையராக பணியாற்றி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள கிராந்தி குமார் பாடி இஆப அவர்களுக்கு மேயர் ந.தினேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார் இது பற்றி மேயர் கூறியதாவது திருப்பூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல், திறன்மிகு திருப்பூர் மக்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு திருப்பூர் வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் சிறப்புற எங்களுடன் இணைந்து பணியாற்றி, தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ள மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்களுக்கு அனைவரின் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.


No comments:
Post a Comment