திருப்பூர் மாவட்டத்தில் பைக்கில் கஞ்சா கடத்தி இருவர் கைது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 March 2023

திருப்பூர் மாவட்டத்தில் பைக்கில் கஞ்சா கடத்தி இருவர் கைது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே பைக்கில் கஞ்சா இலை கடத்திச் சென்ற 2பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 8கிலோ 300, கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம் - திருப்பூர் புறவழிச்சாலை குண்டடம் திருப்பூர் பிரிவு போலீஸ் செக்போஸ்டில் எஸ்ஐ பிரதாப் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த நபர்கள் வைத்திருந்த கட்ட பையை வாங்கி சோதனை செய்தபோது பை முழுவதும் கஞ்சா தூள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கன்னியம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பாண்டி(38), அதே ஊரைச் சேர்ந்த சிவகாளை என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 8 கிலோ 300கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் பார்சல் லாரி சர்வீஸ் மூலம் கஞ்சாவை வாங்கி உசிலம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைத்து வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பியவுடன் ஜி பேயில் பணத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக யாரும் சந்தேகப்படாத வகையில் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்ளை செய்து வருவதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில் தூரமாக உள்ள ஊர்களுக்கு ஆள் செல்ல முடியாத கிராம பகுதிகளுக்கும் கூட கொரியர் மூலம் கஞ்சா பொட்டலத்தின் மீது வாசனை திரவியங்கள் அடித்து கஞ்சா வாடை அடிக்காதவாறு பிளாஸ்டிக் கவர்களால் நன்கு சுத்தி கஞ்சா இலைகளை பவுடராக்கி பார்சல் செய்து அனுப்பி வைப்பதாகவும், மேலும் உசிலம்பட்டியில் பழைய பாக்கி நேரில் தருவதாக கூறியதால் பல்லடத்தைச் சேர்ந்த வியாபாரி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஒட்டன்சத்திரம் சாலை தாராபுரம் எரகாம்பட்டி செக்போஸ்டில் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக மாற்று வழியில் வந்து குண்டடம் செக் போஸ்டில் மாட்டிக்கொண்டதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


எனவே தாராபுரம் டிஎஸ்பி தனராஜ் தலைமையில் குண்டடம் போலீசார் குற்றவாளியை மேலும் துருவி துருவி தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad