வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 March 2023

வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு.


திருப்பூர் மாநகராட்சி 55 வது வார்டில் மேயர் ஆய்வு   திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் 55 வது வார்டில் வினோபா நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை கோரிக்கையை ஏற்று கோடைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (20.3.2023) அன்று வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்  ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வினியோகத்தை 5 நாட்களுக்கு ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கழிவுநீர் வடிகால்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யுமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மக்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டன.


இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் ஆதவன், முருகேஷ், நந்தகோபால் , பகுதி அவைத் தலைவர் தம்பி குமாரசாமி,  மாமன்ற உறுப்பினர் ஆனந்தி சுப்பிரமணியம் கழக மூத்த முன்னோடிகளும் இளைஞர் அணி கவின்  கழக நிர்வாகிகளும் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad