இதில் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் காலை 4 மணி முதல் காய்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு அவர் உரிய இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.இவர்களுக்கு போட்டியாக தரைக் கடை வியாபாரிகளும் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் பாதி காய்கறிகளை கொண்டு சென்று மாடுகளுக்கு போடுவதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் ராமர், தாசில்தார் ஜெகஜோதி மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் விவசாயிகள் கேட்கவில்லை.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன் தலைமையில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் தரக்கடை வியாபாரிகள் ஆகியோருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது சாலையோர வியாபாரிகள் நாங்கள் உழவர் சந்தை அருகே வியாபாரம் செய்வது எங்களது தாராபுரம் தினசரி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றிவிட்டு தற்பொழுது வணிக வளாகம் கட்டி வருவதாலும் தாங்கள் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என கூறினர்.

ஆர்.டி.ஓ.தலைமையிலான பேச்சுவார்த்தையின்போது தாராபுரம் நகராட்சி ஆணையர் ராமர் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தாசில்தார் ஜெகஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.இதனால் தாராபுரம் பொள்ளாச்சி சாலை உழவர் சந்தை அமைந்துள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

No comments:
Post a Comment