கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைந்து 30 வது நாளில் மோட்ச தீபம் ஏற்றினர் .
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவின் 30 ஆம் நாளை முன்னிட்டு நேற்று மாலை திருப்பூர் பழைய பஸ் நிலையம், அரிசி கடை வீதி அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வரன் திருக்கோவிலில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் விசைத்தறி பி.ஆர்.குழந்தைவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள்,மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment