திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இந்திய திருநாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜி. கிரியப்பனவர் இஆப தலைமையில் மகாத்மா காந்திக்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் திருஉருவ சிலைக்கும், நினைவு துணுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்வுகளில் துணை மேயர் ரா. பாலசுப்ரமணியம் மண்டல தலைவர்கள் , சி. கோவிந்தசாமி, ரா. கோவிந்தராஜ் , உமா மகேஸ்வரி மற்றும் 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு உள்பட மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment