திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் துணை கமிஷனர்கள் என 11 பேர் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மரு. சாமிநாதன் ஐபிஎஸ் சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா ஐஏஎஸ் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா ஐபிஎஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் பி.காம், எல். எல். பி. படித்துள்ள அவர் 2019 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தூத்துக்குடி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் உதவி சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். இதன்பின்பு பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment