திருப்பூர் வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர்கள் பழனிபாபா, முத்துக்குமார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சமூகப் போராளி புரட்சியாளர் அய்யா பழனிபாபா அவர்களுக்கும், ஈழத் தமிழர் இன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கும் நினைவேந்தல் நிகழ்வு திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 15 வேலம்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்கள் பழனிபாபா மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் உருவ படங்களுக்கு மாலை
அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் மாநில, மண்டல ,மாவட்ட,, தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment