பானி பூரி கடையில் புகுந்த நல்ல பாம்பு! லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்.
திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வணிக வளாகத்தின் முன்புறம் பானி பூரி கடை உள்ளது இந்த கடை மூடி இருந்த நிலையில் கடை உள்ளே நல்ல பாம்பு நுழைந்ததை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பெயரில் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பூட்டியிருந்த பானி பூரி கடையில் இடுக்குகளில் மற்றும் பெட்டி கடையின் கீழ் புறம் கடை மேல் போத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் அடியிலும் சல்லடை போட்டு தேடினர் . கதவு இடுக்கில் இருந்த நல்ல பாம்பை கண்டு பிடித்தனர். பாம்பு பிடிக்கும் கருவிகளை கொண்டு லாவகமாக பாம்பை பிடித்தனர். பாம்பு சீறியவாறு படம் எடுத்து ஆடியது பாம்பை பெரிய சுருக்கு பையில் போட்டு கட்டினர். பிடிபட்ட நல்ல பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக வடக்கு தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக இருந்தது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment