திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் தேசிய அரசியல் கட்சியான எஸ் டி பி ஐ கட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்திட உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் திருப்பூர் அவிநாசி ரோடு எஸ்ஏபி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது திருப்பூர் வடக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பொதுமக்கள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் . இந்த முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment