திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி ! மாநகர‌ஆணையர் பாராட்டு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி ! மாநகர‌ஆணையர் பாராட்டு !


 திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி ! மாநகர‌ஆணையர் பாராட்டு !



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது .



இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றி வரும் பதினாயிரத்து பதினொரு காவலர்கள் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு எழுத்து தேர்வு , உடல் திறன் தேர்வு, நேர்முக தேர்வு, மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

 


கடந்த மாதம் 30 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்கள் விபரம் வருமாறு ; திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணி புரிந்து வரும் காவலர் அஜித்குமார், தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ் ஐந்தாவது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கணேசமூர்த்தி, ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கணிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர், சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும்  நான்கு காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad