திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை.
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் -1, வார்டு எண் -10 க்கு உட்பட்டரன அனுப்பர்பாளையம் ஓம் விநாயகா கார்டனில் தேசிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார 15வது மத்திய நிதி குழு மானியத் திட்டம்(2023-24) ன் கீழ் ரூ. 30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுமான பணி துவங்க பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1-வது மண்டல தலைவர் திருமதி. உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாச்சலம்,10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு அவர்களும் மற்றும் வேலம்பாளையம் பகுதி செயலாளர் திரு.கொ. ராமதாஸ், பகுதி துணைச் செயலாளர் மணிமாறன், 10 வது வார்டு பிரதிநிதி செந்தில்குமார், 14 வது வார்டு துணை செயலாளர் கஜேந்திரன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ரெட்டி, 10 வது வார்டு வட்டக் கழக பொருளாளர் ரமேஷ், பாலு, செல்வம், மீனவர் அணி நிர்வாகி ஆறுச்சாமி, ஆறுமுகம், வெங்கடாசலம், சுப்பு, வெல்டர் முத்துக்குமாரசாமி, குமார், பாலிஸ் பாலு மற்றும் திமுக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன்
No comments:
Post a Comment