திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாசர் பட்டி பகுதியில் தேசிய வங்கி இயங்கி ஒன்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் முதல் பணமாக 2 லட்சம் வைக்கபட்டு,மீதமுள்ள 3 லட்சம் ரெக்க பணத்தை மறதியாக ஏடிஎம் பின்புறம் வைத்துவிட்டு தங்களது பணிக்கு சென்று விட்டனர்..அப்போது இரவு நேரந்து பணியில் ஈடுபட்டிருந்த தாராபுரம் காவலர் & ஊர்க்காவல் படை வீரர் அந்த 3 லட்சம் பணத்தை பத்திரமாக மீட்டெடுத்து குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


 அதன் பின்னர்,மறுநாள் காலை வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர், இதனை அறிந்த வங்கி மேலாளர் காவல் நிலையத்திற்கு வந்து அதற்குண்டான காரணத்தை கூறி பணத்தை வாங்கி சென்றனர்..3 லட்சம் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரருக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்..

No comments:

Post a Comment

Post Top Ad