திருப்பூர் வேலம்பாளையம் புதிய அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் , திருப்பூர், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை 62,215 சதுரடி பரப்பளவில், 86 படுக்கைகளுடன் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட நவீன அடுக்குமாடி கட்டிட கட்டமைப்புகளை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார், இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களும்,
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களும், திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடி.மு. மு.நாகராசன், வடக்கு மாநகர திமுக செயலாளர், மரியாதைக்குரிய மேயர் .ந.தினேஷ்குமார் அவர்களும் தெற்கு மாவட்ட செயலாளர்,4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் இஆப மற்றும் மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை அனைத்து சங்க நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
No comments:
Post a Comment