அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 August 2024

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 21 இல் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் நினைவு தினத்தின் நிகழ்ச்சிகளை அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி( எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநில ,மாவட்ட ,மாநகர, வார்டு,ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad