தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொதுச்செயலாளர் புசி ஆனந்த் அவர்களின் ஆலோசனைபடியும் திருப்பூர் மத்திய மாவட்ட தலைவர் எஸ். பாலமுருகன் அவர்கள் தலைமையில் அனுப்பர்பாளையம் பகுதி கழகத்தின் சார்பாகவும் 10 வது மற்றும் 14 வது வட்ட கழகத்தின் சார்பாகவும் அனுப்பர்பாளையம்,
ஆத்துப்பாளையம் பகுதிகளில் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட தலைவர் எஸ். பாலமுருகன் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து அன்னதானம்,இனிப்பு வழங்கினார். இதில் மத்திய மாவட்ட நிர்வாகிகளும் அனுப்பர்பாளையம் பகுதி கழகத்தின் நிர்வாகிகளும் 10 வது மற்றும் 14 வது வட்ட கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment