முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 இளம் பேச்சாளர்களை தலைமைக்கு தேர்வு செய்து தருமாறு, திமுக தலைவர் , மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் திமுக இளைஞர் அணியை அறிவுறுத்தி இருந்தார்.
அந்த வகையில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில் என் உயிரினும் மேலான எனும் தலைப்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் மாவட்ட. அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற இளம் பேச்சாளர்களின் முழு விவரங்களின் பூர்த்தி செய்த படிவத்தை 52 - வது வட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கவின் குமார் தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடி மு.நாகராசன் அவர்களிடம் வழங்கினார் . உடன் 22- வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ம.அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment