தாராபுரம் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை நகர செயலாளர் முருகானந்தம் வழங்கினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 12 September 2024

தாராபுரம் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை நகர செயலாளர் முருகானந்தம் வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணியில் புதிதாக சேர்ந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை கடந்த 8ம் தேதி திருப்பூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முதல் கட்டமாக 10 இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


 தாராபுரம் நகரில் உறுப் பினர்களாக சேர்க்கப்பட்ட 795 புதிய இளைஞர் அணியினருக்கு இல்லம் தேடிச் சென்று உறுப்பினர் அடையாள அட்டை

வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தாராபுரம் நகரக்கழக செயலாளர் முருனகானந்தம் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச் சியில், கிளை கழகசெயலாளர் முத்து சரவணன், நகர இளைஞரணிதுணை அமைப்பாளர்கள் ஹரிஹரசுதன், சரத்குமார். மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மனோஜ். சஞ்சீவ், கார்த்தி யுவராஜ். கவின், தினேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad