உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 12 September 2024

உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலை கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24 வது ஆண்டாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வைத்தார் விழாவில் 2023-2024 ஆம் ஆண்டின் கல்லூரி அளவில் துறை சார்ந்த வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ 3000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 


மேலும் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்ற 15 பேருக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வணிகவியல் துறை முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன், ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் முனைவர் கிருஷ்ணன், பேராசிரியர் முகமது ஜாபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad