தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் அவர்கள் காலமானதை ஒட்டி குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் குன்னத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் த.வெள்ளையன் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக , குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் சாலை முதல் குன்னத்தூர் பேருந்து நிலையம் வரை மௌன ஊர்வலம் நடந்தது.
இதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment