திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு,காமராஜபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் கழக இரு வண்ண கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதையடுத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு
மேம்பாட்டு அணி சார்பில், நடைபெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர். இந்நிகழ்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் இராசி முத்துக்குமார்,பிரபாவதி, தாராபுரம் நகரசெயலாளர் முருகானந்தம், தாராபுரம் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான எஸ். வி. செந்தில் குமார் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், மூலனூர் ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கொளத்தப்பாளையம்
பேரூர் கழக செயலாளர் துரைசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment