மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கடந்த நூறு நாட்களில் திருப்பூர் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணி மற்றும் விவரங்களை அறிக்கையாக வழங்கினார். திருப்பூர் மேயர் ந.தினேஷ் குமார் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அறுபது வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை , மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள், குடிநீர் வினியோக பணிகள் , தார் ரோடு அமைக்கும் பணிகள் சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகின்றார். இந்த நிலையில் முதல் அமைச்சரை சந்தித்து திருப்பூரின் மாநகர வளர்ச்சி பணிகள் பற்றிய அறிக்கை கொடுத்தது திருப்பூர் மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடைய உதவும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment