திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஸ்ரீ ஜீவாதார சேவை டிரஸ்ட் இணைந்து நடத்தும் மயான புனரமைப்பு திட்டத்தின் கீழ் காண்டவ வனம் பிராஜக்ட் 1 என்கிற 300 மரங்கள் நடும் நிகழ்ச்சி பி.என் ரோடு சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள மயானத்தில் ஸ்ரீ ஜீவாதார சேவை டிரஸ்ட் பொறுப்பாளர் ஆனந்த் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் ந தினேஷ்குமார் அவர்களும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் G கிரியப்பனவர் அவர்களும் துணை மேயர் MKM பாலசுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் 1 வது மண்டல உதவி ஆணையர் மாவட்ட கழக அவை தலைவர் க. நடராஜன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்,எஸ், மணி, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் , 22 வது வார்டு செயலாளர் வி. ராஜ்குமார் 21 வது வார்டு கிருஷ்ணகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வன ஆர்வலர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட மரங்கள் மயானம் முழுவதும் நடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment