தாராபுரம் தி.மு.க. நகர கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தாராபுரம் நகர அவைத்தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் தாராபுரம் நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Post Top Ad
Wednesday, 18 September 2024
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment