திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் எம்.குமாரபாளையம் ஊராட்சி கருடன்கோட்டை மற்றும் எலந்தோப்பு ஆகிய கிராமங்களில் 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
கருடன் கோட்டை பகுதியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டிலும், எலந்தோப்பு கிராமத்தில்ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழுதுணை தலைவரும், தி.மு.க. மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் எம். குமாரபாளையம்
ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து,துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment