திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகிற 29/9/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30மணி அளவில் அலங்கியம் சாலை முருகன் திருமண மண்டபம் தென்புறம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.அது சமயம் மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,நகர செயலாளர் சு.முருகானந்தம் B.E,M.C ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர்.தமிழ்நாடு செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு மு .பெ.சாமிநாதன், அவர்களும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ், அவர்களும் மாநில இளைஞரணி துணை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே .இ.பிரகாஷ்,அவர்களும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.ஈஸ்வரசாமி, அவர்களும் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளனர்.
அது சமயம் மாநில, மாவட்ட,, நகர ,ஒன்றிய ,பேரூர் கழக இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் முன்னிலை வகிக்கின்றனர் கிளைக் கழக இந்நாள், முன்னாள் செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் கழக செயல் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் நகர செயலாளர் சு.முருகானந்தம் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment