எஸ்டிபிஐ கட்சியின் 10 வது மாநில பொது குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஸ்ரீனிவாச மஹாலில் இன்று (நவம்பர் 23) துவங்கியது. நவம்பர் சனி 23, ஞாயிறு 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொதுக்குழு கூட்டத்தினை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கட்சி கொடியை ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்கள் அப்துல் மஜீத் பைஸி, இல்யாஸ் தும்பே, தேசிய செயலாளர்கள் ரியாஸ் பாரங்கிபேட், அப்துல் சத்தார், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முகமது பாரூக் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment